கியூஷூவில் உள்ள யாகூஷிமா தீவில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதாக அங்கிருந்த மீன்பிடி படகில் இருந்து ஜப்பான் கடலோர காவல்படைக்கு அவசர அழைப்பு வந்தது. இதனை தொடர்ந்து ஜப்பான் கடலோர காவல் படையினர் மீட்பு பணிகளுக்காக விரைந்தனர். விமானத்தில் சென்ற 8 பேரின் நிலை என்ன என்பது குறித்து உடனடியாக எந்த தகவலும் தெரியவில்லை. மேலும் ஓஸ்ப்ரே விமானம் எந்த அமெரிக்க தளத்தை சேர்ந்தது என்பது தெரியவில்லை. இவாகுனியில் இருந்து ஓகினாவா நோக்கி சென்றதாக கூறப்படுகின்றது.
The post 8 பேருடன் சென்ற அமெரிக்க ராணுவ விமானம் ஜப்பான் கடலில் விழுந்தது appeared first on Dinakaran.