திடீரென கண்கள் சொறுகிய நிலையில் நீவிதா அப்படியே சாய்ந்து விட்டார். அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக நிவீதாவை குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனையில், நிவீதா ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதைக்கேட்டு பெற்றோர் கதறி துடித்தனர். புகாரின்பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிவீதாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது. இதன் முடிவில்தான், தொண்டையில் உணவு சிக்கி உயிரிழந்தாரா? அல்லது உணவு ஒவ்வாமை மற்றும் வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து தெரியவரும். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
The post உணவு சாப்பிட்ட மாணவி திடீரென சுருண்டு விழுந்து பலி: மார்த்தாண்டம் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.