வாகன தணிக்கையின் மூலம் அரசுக்கு ₹63.52 லட்சம் வருவாய்: அலுவலர்களுக்கு அமைச்சர் மூர்த்தி பாராட்டு

சென்னை: வாகன தணிக்கையின் மூலம் அரசுக்கு ₹63,52,269 வருவாய் ஈட்டித்தந்த செங்கல்பட்டு கோட்ட நுண்ணறிவு பிரிவு அலுவர்களுக்கு அமைச்சர் மூர்த்தி பாராட்டு சான்றிதழ் வழங்கினார். வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நேற்று சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி வளாக கூட்டரங்கில் அக்டோபர் 2023க்கான அனைத்து இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.

அப்போது, கடந்த 27ம் தேதி வாகன தணிக்கையின்போது, உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட தங்க நகைகளை பறிமுதல் செய்து அபராதமாக ₹63,52,269 வசூல் செய்து அரசுக்கு வரிவருவாயை ஈட்டித்தந்த செங்கல்பட்டு கோட்ட நுண்ணறிவுப்பிரிவு சுற்றும்படை அலுவலர்களுக்கு அமைச்சர் மூர்த்தி பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

மேலும், வணிகவரித்துறை திண்டுக்கல் வரிவிதிப்பு வட்டத்தில் பணிபுரிந்து மறைந்த உதவியாளர் கா.முத்துசாமி வாரிசுதாரர் மு.மனோகருக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணையை அமைச்சர் வழங்கினார். கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் ஜோதி நிர்மலாசாமி, வணிகவரித்துறை ஆணையர் டி.ஜகந்நாதன், இணை ஆணையர் (நிர்வாகம்) வே.இரா.சுப்புலெட்சுமி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

The post வாகன தணிக்கையின் மூலம் அரசுக்கு ₹63.52 லட்சம் வருவாய்: அலுவலர்களுக்கு அமைச்சர் மூர்த்தி பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: