திண்டுக்கல்: பழனி தண்டாயுதபாணி சாமி கோயிலின் கம்பிவட ஊர்தி சேவை நாளை ஒருநாள் மட்டும் இயங்காது என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை ஒருநாள் மட்டும் ரோப்கார் சேவை இயங்காது. பக்தர்கள் படிப்பாதை மற்றும் மின் இழுவை ரயிலை பயன்படுத்திக் கொள்ள பழனி கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.