சங்கரன்கோவிலில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்

சங்கரன்கோவில், நவ.24: சங்கரன்கோவிலில் மது உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. சங்கரன்கோவில் புதிய பஸ் நிலையம் மற்றும் சங்கரநாராயண சுவாமி கோவில் தேரடி அருகிலும் கலைவாணர் கலைக்குழுவினர் சார்பில் கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தப்பாட்டம், சாட்டை குச்சி ஆட்டம், மரக்கால் ஆட்டம், கரகாட்டம் போன்ற தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகளின் மூலம் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். மேலும் மது ஒழிப்பு, மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு பாடல்கள் பாடி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

The post சங்கரன்கோவிலில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் appeared first on Dinakaran.

Related Stories: