கனமழை எதிரொலி: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் மலையேற தடை..!!

விருதுநகர்: கனமழை எதிரொலியால் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதோஷம், பௌர்ணமி தினங்களுக்காக 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை சதுரகிரி மலையேற அனுமதி இருந்தது. தற்போது அவ்வப்போது கனமழை பெய்து வருவதால் பாதுகாப்பு கருதி சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

The post கனமழை எதிரொலி: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் மலையேற தடை..!! appeared first on Dinakaran.

Related Stories: