அப்போது வெறிபிடித்த தெருநாய் ஒன்று அவ்வழியாக சென்ற 30க்கும் மேற்பட்டோரை அடுத்தடுத்து கடித்தது. இதனால் நாயை பார்த்து பொதுமக்கள் பயந்து வேறு வழியாக சென்றனர். இதில் படுகாயமடைந்த 25 பேர், ஸ்டான்லி அரசு மருத்துவனைக்கு சென்று சிகிச்சை பெற்றனர். லேசான காயமடைந்த 5 பேர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதனிடையே அங்கு திரண்ட பொதுமக்கள், அந்த நாயை கல்லால் அடித்து விரட்டினர். இதுகுறித்து ராயபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
The post வண்ணாரப்பேட்டை ஜி.ஏ ரோட்டில் தெருநாய் கடித்து 30 பேர் காயம் appeared first on Dinakaran.