அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு புதிய அரசாணையை வௌியிட்டுள்ளது. அந்த அரசாணையில் கூறியிருப்பதாவது: தீவிரவாத தடுப்பு பிரிவுக்காக ரூ.60 கோடியே 12 லட்சத்து 81,330 நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீவிரவாத தடுப்பு பிரிவில் ஒன்று 383 பணியாளர்களுடன் செயல்படும். இந்த தடுப்பு பிரிவுக்கு, தமிழ்நாடு நுண்ணறிவு பிரிவு கூடுதல் டிஜிபி தலைமை வகிப்பார். இந்த பிரிவு சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், சுதந்திரமாக செயல்படுவதற்கும் உரிய அதிகாரங்களை வழங்கி டிஜிபி உத்தரவிட்டுள்ளார். தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளை இந்திய தண்டனை சட்டத்தில் கூறப்பட்டுள்ள குறிப்பிட்ட பிரிவின்கீழ் மாநிலம் முழுவதும் உள்ள காவல் நிலையங்கள் மேற்கொள்ளும். இந்த பிரிவுக்கான அனைத்து நவீன கருவிகள், வாகனங்கள், அலுவலக கட்டிடங்கள், தொலைத்தொடர்பு கருவிகள், பர்னிச்சர்கள் வாங்க இந்த நிதியில் ரூ.26 கோடியே 56 லட்சத்து 64,790 ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த படைக்கு 193 அதிகாரிகள், 190 துறையில் பணியாற்றும் அதிகாரிகள், 36 அமைச்சு பணியாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது. இந்த அரசாணையைத் தொடர்ந்து, இந்தப் பிரிவுக்கு என்று ஐஜி அந்தஸ்தில் ஒருவர் விரைவில் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது நியமனத்திற்குப் பிறகு எஸ்பி, டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவலர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The post தமிழக காவல்துறை நுண்ணறிவு பிரிவில் தீவிரவாத தடுப்பு பிரிவு அமைப்பு: ரூ.60 கோடி ஒதுக்கீடு appeared first on Dinakaran.