தேசிய சுகாதார திட்ட செயல்பாடு குறித்து பெருமாள்குளம், மீரான்குளம் பகுதியில் மாநில குழுவினர் கள ஆய்வு

சாத்தான்குளம்,நவ.21: தேசிய சுகாதார திட்ட செயல்பாடு குறித்து பெருமாள்குளம், மீரான்குளம் பகுதியில் மாநில அளவிலான குழுவினர் மக்களிடம் கள ஆய்வு நடத்தினர். சாத்தான்குளம் அருகே சாலைபுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மருத்துவ அலுவலர் கிரன்ராஜ் ஆலோசனையின் பேரில் தேசிய சுகாதார திட்டம் செயல்பாடு, மக்களிடம் சென்றடைவது, அதன் விழிப்புணர்வு குறித்த மாநில அளவிலான அள ஆய்வுக்குழுவினர் சுரேஷ் தலைமையில் 8பேர் வருகை தந்து மீரான்குளம், பெருமாள்குளம் பகுதியில் மக்களிடம் கள ஆய்வு நடத்தினர். மக்களிடம் திட்டம் குறித்தும், அதன் செயல்பாடு குறித்தும் கருத்துரு கேட்டறிந்தனர். இந்த குழுவினர் தேர்ந்தெடுத்த வீடுகளுக்கு சென்று கள ஆய்வு நடத்தினர். இந்த சர்வே பணி தொடர்ந்து 3நாள்கள் நடக்க உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். இதில் சுகாதார ஆய்வாளர் ஜேசுராஜ், சுகாதார செவிலியர் லட்சுமி, சாந்தி, மெர்சி, டிவிஎஸ் அறக்கட்டளை கள பணியாளர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட மஸ்தூர், ஆஷா பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post தேசிய சுகாதார திட்ட செயல்பாடு குறித்து பெருமாள்குளம், மீரான்குளம் பகுதியில் மாநில குழுவினர் கள ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: