அகமதாபாத் : நரேந்திர மோடி மைதானத்தில் நவம்பர் 19ம் தேதி நடைபெற உள்ள உலக கோப்பை இறுதிப் போட்டி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பு, வீரர்கள் மற்றும் பார்வையாளர்களை கவரும் வகையில் விமான சாகசங்களை நிகழ்த்த இந்திய விமானப்படை திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒத்திகை இன்றும் நாளையும் நடைபெறுகிறது.