இந்நிலையில், டிசம்பர் 20ம் தேதி சனிப் பெயர்ச்சி நடைபெற உள்ளது. இதையடுத்து சனிப்பெயர்ச்சி திருவிழாவை நடத்துவதற்கு சிறப்புக் குழுவை அமைத்து அறநிலையத் துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கிடையே, கோயிலில் விழாக்கள் நடத்துவது தொடர்பாக எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் தருமபுரம் ஆதீன கருத்தர் தம்பிரானுடன் கலந்து பேசிய பின்னர்தான் முடிவெடுக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் 25ம் தேதி புதுச்சேரி அரசிடம் தருமபுரம் ஆதீன கர்த்தர் ஸ்ரீலஸ்ரீ மாசிலாணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பரிந்துரை கடிதம் அனுப்பி இருந்தார்.
அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் உயர் நீதிமன்றத்தில் தருமபுரம் ஆதீனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுவில், விழா பணிகள் தொடர்பாக தன்னை கலந்தாலோசிக்கவில்லை. விழா தொடர்பான டெண்டர் அறிவிப்பதிலும் கலந்தாலோசிக்கவில்லை. எனவே, தனது மனுவை பரிசீலிக்கவும், சனி பெயர்ச்சி விழா தொடர்பாக தன்னிடம் கலந்து பேசவும் உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.
The post சனிப்பெயர்ச்சி குறித்து ஆலோசனை தன்னை கலந்தாலோசிக்க கோரி தருமபுரம் ஆதீனகர்த்தர் வழக்கு: புதுச்சேரி அரசு அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.