சச்சின் பைலட் போட்டியிடும் டோங்க் தொகுதி தேர்தலை லாகூர் கண்காணிக்கிறது: சர்ச்சை பாஜ எம்பி பேச்சு

ஜெய்ப்பூர்: நாடாளுமன்றத்தில் பகுஜன் சமாஜ் எம்பி டேனிஷ் அலிக்கு எதிராக அவதூறாக பேசி சர்ச்சையில் சிக்கிய பா.ஜ எம்பி ரமேஷ்பிதூரி நேற்று ராஜஸ்தானில் சச்சின் பைலட் போட்டியிடும் டோங்க் தொகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலை, குறிப்பாக டோங்கில் நடக்கும் தேர்தலை பாகிஸ்தான் கண்காணித்து வருகிறது. தேர்தல் முடிந்து லட்டுகள் நமது நாட்டில் வினியோகிக்கப்படுமா அல்லது லாகூரில் விநியோகிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். வெளிநாட்டில் அமர்ந்திருக்கும் எதிரிகள் இந்த தேர்தலை கண்காணித்து வருகின்றனர் என்றார்.

The post சச்சின் பைலட் போட்டியிடும் டோங்க் தொகுதி தேர்தலை லாகூர் கண்காணிக்கிறது: சர்ச்சை பாஜ எம்பி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: