இது தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள்:
* கேண்டின்கள் தொடர்ந்து முறையாக சுத்தம் செய்ய வேண்டும் , கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.
* சுத்தம் செய்ய பயன்படுத்தும் கிருமி நாசினிகளை உணவு உள்ள இடத்தில் இருந்து தனியாக வைக்க வேண்டும்.
* பூச்சிகள் மற்றும் விலங்குகள் எளிதில் அணுகாத வகையில் உணவகங்களுக்கு அருகே உள்ள துளைகள் , சாக்கடை , கால்வாய்கள் போன்றவற்றை முழுமையாக மூட வேண்டும்.
* விலங்குகள், பறவைகள் மற்றும் செல்லப்பிராணிகள் உணவு நிலையங்கள் / வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படக்கூடாது.
* உணவுப் பொருட்கள் நிலப்பரப்பிற்கு மேலும் சுவர்களில் இருந்து விலகியும் பூச்சி எதிர்ப்பு கொள்கலன்களில் வைத்து சேமிக்கப்பட வேண்டும்.
* பழுதான கட்டிடங்களை உடனடியாக பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு பூச்சிகள் மற்றும் விலங்குகள் அணுகாத அளவிற்கு கட்டிடத்தை பராமரிக்க வேண்டும்.
* அடைக்கப்பட்ட உணவு பொருட்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை மட்டுமே வசூலிப்பதுடன் , காலாவதி காலத்திற்குள் இருந்தால் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.
* உணவுகளை கையாளுபவர்கள் உடல்நிலை மற்றும் மருத்துவ பரிசோதனைகளை அவ்வப்போது மேற்கொள்ளவேண்டும். உடல்நிலை சரி இல்லாத நபர் உணவுகளை கையாள கூடாது.
* உணவுகளை கையாளுபவர்கள் கட்டாயம் கையுறை அணிவதுடன் தலைமுடி உதிராமல் இருக்க தலையுறை அணிய வேண்டும்.
* உணவு கையாளுபவர்கள் எப்போதும் கைகளை சோப்பு மற்றும் சுத்தமான குடிநீரால் கழுவி, கைகளை கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.
* உணவு கையாளுபவர்கள் புகைபிடித்தல், எச்சில் துப்புதல், மெல்லுதல், தும்மல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
* உணவுப் பொருட்கள் சேமித்து வைக்கும் இடங்கள் உணவகத்தில் இருந்து தனியாகவும் பூச்சி மற்றும் விலங்குகள் நெருங்காத அறைகளில் சேமிக்கப்பட வேண்டும்.இவ்வாறு வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிட்டுள்ளது.
The post அரசு மருத்துவமனை கேண்டின்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: உணவு பாதுகாப்பு துறை வெளியீடு appeared first on Dinakaran.