இந்த மனு, நீதிபதி ஆர்.ஹேமலதா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.ஒய்.ஜார்ஜ் வில்லியம்ஸ் ஆஜராகி, தொழிலாளர்களிடம் கூட தெரிவிக்காமல் அவர்களின் போனஸ் மற்றும் சம்பளத்தில் சந்தா தொகையை பிடித்தம் செய்கிறர்கள். வருடாந்திர போனஸ் தொகையில் தொழிற்சங்கங்களுக்கு பணம் பிடித்தம் செய்யப்படுவதால் பண்டிகைக்காக கடன் வாங்க வேண்டிய நிலைக்கு மீண்டும் தள்ளப்படுகிறார்கள் என்று வாதிட்டார். இதையடுத்து, இந்த மனுவுக்கு தமிழ்நாடு அரசும், போக்குவரத்து கழகங்களும் பதிலளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.
The post போனஸ் பணத்தில் தொழிற்சங்க சந்தா பிடித்தமா? போக்குவரத்து கழகங்கள் பதிலளிக்க ஐகோர்ட் நோட்டீஸ் appeared first on Dinakaran.