வியாசர்பாடியில் வீட்டில் நின்ற கார் எரிப்பு

பெரம்பூர்: சென்னை வியாசர்பாடி கக்கன் ஜி காலனி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஆதிமூலம் (45). இவர் மாதவரத்தில் மணல், ஜல்லி வியாபாரம் செய்கிறார். நேற்று மாலை தனது காரை வீட்டுக்கு வெளியே நிறுத்தியிருந்தார். நள்ளிரவு 2 மணி அளவில் பக்கத்து வீட்டில் வசித்துவரும் ஒருவர், ஆதிமூலத்தை செல்போனில் தொடர்பு கொண்டு, ‘’உங்களது கார் எரிந்து கொண்டிருக்கிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஆதிமூலம் உடனடியாக வெளியே வந்து பார்த்துபோது காரின் பின்பக்க டயர்கள், டிக்கி உள்ளிட்டவை தீப்பிடித்து எரிந்துக்கொண்டிருந்தது. இதுபற்றி ஆதிமூலம் கொடுத்த தகவல்படி, வியாசர்பாடி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் காரின் ஒரு பகுதி சேதம் அடைந்தது. இதுகுறித்து ஆதிமூலம் கொடுத்துள்ள புகாரின்படி, செம்பியம் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

The post வியாசர்பாடியில் வீட்டில் நின்ற கார் எரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: