இளநிலை உதவியாளராக 2002ல் சேர்ந்து 2005ல் ராஜினாமா செய்தேன். கடந்த 1.4.2003ல் புதிய பென்ஷன் திட்டம் அறிமுகமானது. இதன்பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு தான் புதிய பென்ஷன் திட்டம் பொருந்தும். ஆனால், 2002ல் நியமனம் பெற்ற எனக்கு புதிய பென்ஷன் திட்டம் பொருந்தாது. எனவே, இந்த காலகட்டத்தை கணக்கிட்டு எனக்கு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என மனு அளித்தேன். ஆனால், நான் ராஜினாமா செய்துவிட்டதாக கூறி எனது கோரிக்கையை நிராகரித்து கணக்கு பதிவாளர் ஜெனரல் உத்தரவிட்டார். இதை ரத்து செய்து, நான் முதலில் பணியில் சேர்ந்ததை கணக்கிட்டு எனக்கு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி எஸ்.ஸ்ரீமதி விசாரித்து, ‘‘அரசு ஊழியர் ஒருவர் மாநில அரசு மற்றும் ஒன்றிய அரசு பணியில் சேர்ந்தவரின் ராஜினாமாவை தொழில்நுட்ப காரணத்தின் அடிப்படையில் ஏற்றாலே அது பென்ஷன் விதிகளில் பொருந்தும். ஏனெனில் வேறொரு பணிக்காக, தற்போதைய பணியை ராஜினாமா செய்வதால் அந்த பணியும் கணக்கிடக்கூடியது தான். தொழில்நுட்ப காரணங்களுக்கான ராஜினாமா பணிவிதிகளுக்கு உட்பட்டது. ராஜினாமா ஏற்கப்பட்டதால் தான் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் தனியார் பணிக்கு செல்லவில்லை. மற்றொரு அரசு பணியில் தான் சேர்ந்துள்ளார். எனவே, மனுதாரருக்கு பழைய பென்ஷன் திட்டத்தின் கீழ் பணப்பலன்கள் கிடைப்பதற்கான திருத்தங்களை பணிபதிவேட்டில் 12 வாரத்தில் மேற்கொள்ள வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.
The post ஒன்றிய மற்றும் மாநில அரசு பணிகளை ராஜினாமா செய்தவருக்கு பழைய பென்ஷன் திட்டத்தில் பணப்பலன்: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.
