பிங்க் பிக்மெண்ட்டட் ஃபேக்கல்டேடிவ் மெத்தைலோ ட்ரோஃப் என்ற உயிரினக் காரணியை ஒரு லிட்டருக்கு ஒரு மில்லி என்ற வீதத்தில் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். நிலத்தடி நீரை (கிணறுகள், உறைக் கிணறுகள், ஆழ்துளை குழாய்க் கிணறுகள்) தேவைக்கேற்றவாறு, சிக்கனமாக விவசாயிகள் பயன்படுத்த வேண்டும். சம்பா பருவத்தில் பயிர் காப்பீடு செய்ய அறிவிக்கை செய்யப்பட்டுள்ள கிராமங்களில் உள்ள அனைத்து விவசாயிகளும் 15.11.2023க்குள் பயிர் காப்பீடு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது. இக்கூட்டத்தில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் அபூர்வா, வேளாண்மைத் துறை ஆணையர் சுப்பிரமணியன், வேளாண்மை கூடுதல் இயக்குநர் ஸ்ரேயா, தலைமைப் பொறியாளர் முருகேசன் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post விவசாயிகள் நவ.15ம் தேதிக்குள் பயிர்க்காப்பீடு செய்ய வேண்டும்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.