தக்கலை அருகே பெண்ணிடம் ₹10 லட்சம் கேட்டு மிரட்டல்

குமாரபுரம், அக்.31 : தக்கலை அருகே உள்ள திருவிதாங்கோடு செட்டியார் தெரு பகுதியை சேர்ந்தவர் நபீலா (28). அவரது கணவர் அமெரிக்காவில் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அதேபோல் துரப்பு பகுதியை சேர்ந்தவர் சுகேல் (37). நபீலாவின் தூரத்து உறவினர் ஆவார். குளச்சலில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இருவரும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இந்த நிலையில் சுகேல், நபீலாவை காதலிப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் அதை ஏற்க நபீலா மறுத்துள்ளார். அத்துடன் அவரிடம் பேசுவதையும் தவிர்த்துள்ளார். ஆனால் சுகேல் அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்தநிலையில் சம்பவத்தன்று நபீலா அவரது தாயார் வீட்டில் இருந்துள்ளார். அங்கு வந்த சுகேல், நபீலாவிடம் ரூ.10 லட்சம் கேட்டுள்ளார். பணம் கொடுக்காவிட்டால் உன்னை கொன்று விடுவேன் என சுகேல் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து நபீலா தக்கலை காவல் நிலையத்தில்புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் சுகேல் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தக்கலை அருகே பெண்ணிடம் ₹10 லட்சம் கேட்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Related Stories: