தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பள்ளிக்கரணை போலீசார், பெட்ரோல் குண்டை கைப்பற்றி, வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரித்தனர். அதில், கடந்த 22ம் தேதி இரவு மயிலை பாலாஜி நகரில் பெயின்டர் பிரசாந்தை (28) கொலை செய்தவர்களுக்கு, பல்லு மதன் உதவி செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரசாந்த் நண்பர்கள் பல்லு மதனை தீர்த்துக்கட்ட வந்துள்ளனர். அவர் வீட்டில் இல்லாததால் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பியது தெரியவந்தது. இந்த வழக்கில், மயிலை பாலாஜி நகர் 3வது பகுதியை சேர்ந்த அபினேஷ் (19), 2வது பகுதியை சேர்ந்த தினேஷ் (28), தீபன் ராஜ் (19) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
The post பாஜ பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 3 பேர் கைது appeared first on Dinakaran.