அப்போது ரவுடி மதன் திடீரென கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து, தன்னை பிடித்தால் கொலை செய்துவிடுவேன் என்று தனிப்படையினரை மிரட்டியுள்ளார். இதை பார்த்த பொதுமக்கள் ஒன்று கூடினர். அவர்களையும் அருகில் வந்தால் குத்தி விடுவேன் என்று கூறியபடி ஆட்டோவில் மீண்டும் தப்ப முயன்றார். ஆனால் தனிப்படையினர் பட்டினப்பாக்கம் போலீசார் உதவியுடன் அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். இதனால் சிறிது நேரம் சாந்தோம் பகுதியில் பரபரப்பும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. பின்னர் பிடிபட்ட ரவுடி மதனை காசிமேடு காவல் நிலைய தனிப்படையினர் ஆட்டோ ஒன்றில் ஏற்றி சென்றனர்.
The post சாந்தோம் பகுதியில் சுற்றிவளைத்த போது தனிப்படையினரை கத்திமுனையில் மிரட்டிய ரவுடி கைது: கொலை வழக்கில் 5 ஆண்டு தலைமறைவாக இருந்தவர் appeared first on Dinakaran.