அரசு ஊழியரின் மனைவி உயிருடன் இருக்கும்பட்சத்தில், வேறு ஒருவரை திருமணம் செய்ய வேண்டுமானால் அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும். அதேபோல், பெண் அரசு ஊழியரும், தன் கணவர் உயிருடன் இருக்கும் போது மற்றொருவரை அரசின் அனுமதியின்றி திருமணம் செய்து கொள்ளக் கூடாது. மேற்கண்ட விதிகளை பின்பற்றாத அரசு ஊழியர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையை அதிகாரிகள் உடனடியாக தொடங்கலாம்’ என்று கூறப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அசாம் அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் நீரஜ் வர்மா கடந்த 20ம் தேதி வெளியிட்ட நிலையில், உடனடியாக இந்த உத்தரவு அமலுக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
The post மனைவி உயிருடன் இருக்கும் போது அரசு ஊழியர்கள் 2வது திருமணம் செய்ய தடை: அசாம் அரசு அதிரடி அறிவிப்பு appeared first on Dinakaran.