பாடந்துறை அங்கன்வாடியில் உலக அயோடின் பற்றாக்குறை தடுப்பு தின விழிப்புணர்வு

 

கூடலூர், அக்.21: பாடந்துறை அங்கன்வாடியில் உலக உணவு தினம் மற்றும் உலக அயோடின் பற்றாக்குறை தடுப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், ஆல்தி சில்ட்ரன், ஏகம் பவுண்டேஷன் ஆகியவை இணைந்து நடத்தியது. அங்கன்வாடி பணியாளர் தேவகுமாரி தலைமை தாங்கினார்.

துணை சுகாதார நிலைய செவிலியர் பிரபாவதி, கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையச் செயலாளர் சிவசுப்ரமணியம், ஏகம் பவுண்டேஷன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன், ஆல்தி சில்ட்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் ஆகியோர் ஊட்டச்சத்தான உணவுகள் எடுத்துக் கொள்வது, தரமான உணவுகள், உணவு பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சியில் அங்கன்வாடி பணியாளர்கள், செவிலியர்கள் ஆஷா பணியாளர்கள், அங்கன்வாடி குழந்தைகளின் பெற்றேர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பாடந்துறை அங்கன்வாடியில் உலக அயோடின் பற்றாக்குறை தடுப்பு தின விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: