அப்போது கார் உள்ளிட்ட வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட 27.540 கிலோ தங்கம் மற்றும் 15 கிலோ வெள்ளி நகைகள் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்தது. இதுதொடர்பாக 3 பேரிடம் விசாரணை நடத்தினர். அப்போது பஷீர்பாக்கில் உள்ள நகைக்கடையில் இருந்து தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை எடுத்து செல்வதாக தெரிவித்தனர். ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தேர்தல் அரிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் கவடிகூடா அருகே நடந்த வாகன சோதனையின்போது 6 பேரிடம் இருந்து ரூ.2.09 கோடி ஹவாலா பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post தெலங்கானாவில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை ரூ.2.09 கோடி ஹவாலா பணம் சிக்கியது: 27.540 கிலோ தங்கம், 15 கிலோ வெள்ளி பறிமுதல் appeared first on Dinakaran.