தமிழ்நாட்டில் 11 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவு; கோவை மாநகராட்சி ஆணையராக சிவகுரு பிரபாகரன் நியமனம்..!!

சென்னை: தமிழ்நாட்டில் 11 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. கோவை மாநகராட்சி ஆணையர் எம்.பிரதாப், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் ஜே.எம்.டி.யாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோவை மாநகராட்சி ஆணையராக சிவகுரு பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா, திருவாரூர் மாவட்ட கூடுதல் ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். நெல்லை மாநகராட்சி ஆணையராக தாக்கரே சுபம் நியமிக்கப்பட்டுள்ளார்.

The post தமிழ்நாட்டில் 11 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவு; கோவை மாநகராட்சி ஆணையராக சிவகுரு பிரபாகரன் நியமனம்..!! appeared first on Dinakaran.

Related Stories: