தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 208 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும், துறையில் கருணை அடிப்படையில் 24 பணியாளர்களுக்கும், கோயில்களில் பணிபுரிந்து பணியின் போது இறந்த 99 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. கோயில் சொத்துகளை மீட்டெடுத்ததில் எதுவும் ஒளிவுமறைவு இல்லை. யார் கேட்டாலும் இந்த விவரங்கள் அடங்கிய 2 புத்தகங்களும் அனுப்பி வைக்க இந்து சமய அறநிலையத்துறை தயாராக இருக்கிறது. அண்ணாமலை அலுவலகத்திற்கும் இந்த புத்தகங்களை ஏற்கனவே அனுப்பி வைத்திருக்கிறோம். இந்த ஆட்சியின் மீது களங்கம் கற்பிக்க வேண்டும் என்று எண்ணி ஆன்மிகத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்றார்.
The post இந்து சமய அறநிலையத்துறையில் 100 தட்டச்சர்களுக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் சேகர்பாபு வழங்கினார் appeared first on Dinakaran.
