இருவரும் 7 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதனை எதிர்த்து இருவரது தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி துஷார் ராவ் கடேலா முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், சீனாவை சேர்ந்தவரிடம் இருந்து ரூ..75கோடி பெற்றதாக கூறப்படுவது பொய்யாகும்.
சீனாவில் இருந்து ஒரு பைசா கூட பெறப்படவில்லை. போலி வழக்கு தொடரப்பட்டுள்ளது” என்று வாதிட்டார். இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பை நீதிபதி துஷார் ராவ் ஒத்திவைத்துள்ளார். குற்றம்சாட்டப்பட்ட இருவரையும் மீண்டும் காவலில் வைப்பது நீதிமன்றத்தின் உத்தரவுக்குட்பட்டது என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
The post சீனாவிடம் இருந்து ஒரு பைசாகூட வாங்கவில்லை: பொய் வழக்கு – நியூஸ் கிளிக் நிறுவனர் மறுப்பு appeared first on Dinakaran.