அந்த மூட்டைக்குள் கஞ்சா சாக்லெட் மற்றும் கஞ்சா பொட்டலங்கள் விற்பனைக்கு கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. பிடிபட்ட வாலிபரை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். விசாரணையில், அவர் ஒடிசா மாநிலம், காஜாபடியை சேர்ந்த பாஸ்கர் மண்டல் (29) எனத் தெரியவந்தது. மேலும், இவர் ஒடிசாவில் இருந்து ரயில் மூலமாக கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லெட்டுகள் கடத்தி வந்து, சென்னை மற்றும் புறநகர் பகுதி கடைகளில் விற்பனை செய்து வந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து பரங்கிமலை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஒடிசா மாநில வாலிபர் பாஸ்கர் மண்டலை கைது செய்தனர். அவரிடம் இருந்து 8 கிலோ கஞ்சா மற்றும் 5 கிலோ கஞ்சா சாக்லெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post மடிப்பாக்கம், கீழ்க்கட்டளையில் கஞ்சா சாக்லெட் விற்ற வடமாநில வாலிபர் கைது: 13 கிலோ பறிமுதல் appeared first on Dinakaran.