இது தொடர்பாக வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தொடர்பு கொண்டு விவரத்தை கூறியுள்ளார். ஆனால் எந்தவித பதிலும் சரியாக கிடைக்காததையடுத்து வங்கி மேலாளரிடம் தெரிவித்துள்ளார். உடனே அவரது வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. அதற்கு பிறகு வங்கி தரப்பிலும் எந்தவித பதிலும் அளிக்க முன்வரவில்லை. ஏற்கனவே தஞ்சாவூரை சேர்ந்த ஒரு நபருக்கு கோட்டாக் வங்கி கணக்கில் ரூ.756 கோடி இருப்பு இருந்ததாக குறுஞ்செய்தி வந்து, அவரது கணக்கு முடக்கப்பட்டது.
அதேபோல, அடுத்ததாக தற்போது அதே கோட்டாக் வங்கியில் இருந்து முகமது இத்ரீஸ்க்கு ரூ.753 கோடி இருப்பு இருப்பது போல் குறுந்தகவல் வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன் சென்னையை சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கு தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி கணக்கில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி இருப்பு காட்டி அதிர்ச்சி கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post தேனாம்பேட்டை மருந்து கடை ஊழியர் வங்கி கணக்கில் ரூ.753 கோடி டெபாசிட்: மீண்டும் மீண்டும் பரபரப்பு appeared first on Dinakaran.