மது விற்றவர் கைது

உடன்குடி, அக். 6: குலசேகரன்பட்டினம் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் தலைமையிலான போலீசார், உடன்குடி பஜார் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள காட்டுப்பகுதியில் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற போலீசார், அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவர், வைத்தியலிங்கபுரத்தை சேர்ந்த குமார்(45) என்பதும், மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

The post மது விற்றவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: