குற்றப்பத்திரிகையை விரைவில் தாக்கல் செய்யவும், அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் மார்ச் 10ல் சிசிடிவி கேமரா பதிவுகளை எனக்கு வழங்கவும், எஸ்சி-எஸ்டி பிரிவின் கீழ் வழக்கு பதிந்து உரிய இழப்பீடு வழங்கவும், ஐஏஎஸ் அதிகாரி அமுதா தலைமையிலான உயர்மட்ட குழு அறிக்கையை எனக்கு வழங்குமாறும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி டி. நாகார்ஜூன் முன் நேற்று மீண்டும் விசாரனைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ஐஏஎஸ் அதிகாரி அமுதாவின் விசாரணை அறிக்கை தயாரிக்கும் பணி முடியும் நிலையில் உள்ளது. விரைவில் தாக்கல் செய்யப்படும் என கூறப்பட்டது. இதையடுத்து விசாரணையை அக். 16க்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
The post விசாரணைக்கு வந்தவர்களின் பல்லை பிடுங்கிய விவகாரம் ஐஏஎஸ் அதிகாரி அமுதாவின் அறிக்கை விரைவில் தாக்கல்: ஐகோர்ட் கிளையில் தகவல் appeared first on Dinakaran.