அமெரிக்காவில் கட்டப்பட்டு வரும் அழகிய கோயில்… முழுவதும் கையால் செதுக்கப்பட்டு கண்ணை பறிக்கும் பிரம்மாண்டம்..!!

வாஷிங்டன்: அமெரிக்காவில் கட்டப்பட்டு வரும் பிரமாண்டமான கோயில் அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளது. அமெரிக்காவின் மிகப்பெரிய இந்த கோயிலான பாக்ஸ் சுவாமி நாராயண அக்சதாம் உள்ளது. முழுவதும் கையால் செதுக்கப்பட்ட இந்த கோயில் 19-ம் நூற்றாண்டின் இந்து ஆன்மிக தலைவரான பகவான் சுவாமி நாராயணனுக்கு அர்பணிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கிய இதன் கட்டுமான பணிகள் தற்போது முடிவடைந்துள்ளன.

இதற்காக ஐரோப்பாவின் பல பகுதிகளில் இருந்து கற்கள் எடுக்கப்பட்டு அவை இந்தியாவில் செதுக்கப்பட்டு பின்னர் அமெரிக்காவில் கட்டப்பட்டது என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். கோயில் திறப்பு விழாவில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடனின் நிர்வாக அதிகாரிகள், அமெரிக்கா காங்கிரஸ் உறுப்பினர்கள் பல்வேறு மாநில ஆளுநர்கள் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அமெரிக்காவில் கட்டப்பட்டு வரும் அழகிய கோயில்… முழுவதும் கையால் செதுக்கப்பட்டு கண்ணை பறிக்கும் பிரம்மாண்டம்..!! appeared first on Dinakaran.

Related Stories: