சென்னையில் காலையில் மழை பெய்யும் வட மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அத்துடன் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாகவும் வடதமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை படிப்படியாக குறைந்து விடைபெறும் நிலைக்கு வந்துள்ளது. இந்நிலையில் மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக ஓரிரு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக கோவை மாவட்டங்களின் மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக திருத்தணியில் 130 மிமீ மழை பெய்துள்ளது. இந்நிலையில், தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. அது வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகர்ந்து வங்கக் கடல் பகுதிக்கு நகரும் என்பதால் இரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரையில் வட மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்யும். சென்னையில் இரவு முதல் காலை வரையில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post சென்னையில் காலையில் மழை பெய்யும் வட மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: