19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் தொடங்கியது..!!

ஹாங்சோவ்: 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் தொடங்கியது. ஆசிய விளையாட்டுப் போட்டியை சீன அதிபர் ஸி ஜின்பிங் தொடங்கி வைத்தார். ஹாங்சோவ் நகரில் தொடங்கிய 19வது ஆசிய விளையாட்டு போட்டி அக்.8 வரை நடைபெற உள்ளது. அனைத்து போட்டிகளும் ஹாங்சோவில் உள்ள 55 அரங்குகள் மற்றும் மைதானங்களில் நடைபெறுகின்றன. சீனா, ஜப்பான், இந்தியா, தென்கொரியா, பாகிஸ்தான் உள்பட 45 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

The post 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Related Stories: