60 ஆண்டுகளுக்குப் பின் கலைஞர் தமிழ்நாட்டின் முதல்வராகப் பொறுப்பேற்றவுடன், பெண்களுக்கு சொத்துரிமை வழங்கி பெரியாரின் உறுதிமொழியை நிறைவேற்றினார். தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள இந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா ஆரம்பத்தில் 15 ஆண்டுகளுக்கு மட்டுமே என்று இருக்கிறது. இது மிகக் குறுகிய காலம் என்பதால் அதை நீட்டிக்க வேண்டும். தொகுதிகளுக்கான எல்லை நிர்ணயப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டும். தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின பெண்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
The post மிகவும் பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையின பெண்களுக்கு உள் ஒதுக்கீடு: மாநிலங்களவையில் வைகோ வலியுறுத்தல் appeared first on Dinakaran.