The post நாடாளுமன்ற அவையின் மாண்பு ஆளுங்கட்சியால் தாக்கப்பட்ட நாள் நேற்று: சு.வெங்கடேசன் எம்.பி. appeared first on Dinakaran.
நாடாளுமன்ற அவையின் மாண்பு ஆளுங்கட்சியால் தாக்கப்பட்ட நாள் நேற்று: சு.வெங்கடேசன் எம்.பி.

சென்னை: நாடாளுமன்ற அவையின் மாண்பு ஆளுங்கட்சியால் தாக்கப்பட்ட நாள் நேற்று என்று சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். சந்திராயன்-3 வெற்றியை பாராட்டும் விதமாக மக்களவையில் நேற்று விவாதம் நடந்தது. பாஜக எம்.பி.க்கள் ஒவ்வொருவரும் விவாதத்தில் பேசிய வீடியோக்களை பார்க்க வேண்டும். அறிவியலுக்கு எதிரான பழமைவாத ஒரு கூட்டத்திடம் இந்த தேசம் எப்படி சிக்கிக்கிடக்கிறது என்பதன் சான்றுகள் அவை என அவர் கூறினார்.