ஊட்டி,செப்.22: தேசிய வேளாண் சந்தை குறித்த கருத்தரங்கு ஊட்டியில் நடந்தது. வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் நீலகிரி மாவட்டத்தில் மின்னணு தேசிய வேளாண் சந்தை இ நாம்(e-Nam) குறித்த கருத்தரங்கு நடந்தது. கருத்தரங்கினை தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் ஷிபிலா மேரி துவக்கி வைத்தார். நீலகிரி விற்பனைக்குழு செயலாளர் சாவித்திரி கலந்துக் கொண்டு மின்னணு தேசிய வேளாண் சந்தை குறித்து வேளாண் வணிகத்துறை அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தார்.
மேலும், e-Nam செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டு மாதிரி விற்பனை நிறுவனங்களான புளூ மவுண்டன் மற்றும் முதுமலை உழவர் உற்பத்தியாளர் சங்கங்களை சேர்ந்த விவசாயிகளின் பெயரில் விற்பனை செய்து காண்பிக்கப்பட்டது. இக்கருத்தரங்கில் வேளாண் துணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி கலந்துக் கொண்டு மின்னணு தேசிய வேளாண் சந்தை குறித்தும், விற்பனை குறித்தும் உரையாற்றினர்.இதில், வேளாண் வணிக உதவி செயற்பொறியாளர்,தமிழ்நாடு வேளாண்மை விற்பனை வாரியம், தோட்டக்கலைத்துறை அலுவலர்கள், வேளாண் வணிகத்துறை அலுவலர்கள்,உதவி வேளாண் அலுவலர்கள்,நீலகிரி விற்பனைக்குழு மேலாளம், கண்காணிப்பாளர் மற்றும் உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
The post தேசிய வேளாண் சந்தை குறித்து ஊட்டியில் கருத்தரங்கு appeared first on Dinakaran.