அமித்ஷாவை சந்தித்த 4 நாட்களில் கூட்டணியில் இருந்து பாஜவை வெளியேற்றியது ஏன்?.. எடப்பாடி பழனிச்சாமியின் முடிவு குறித்து பரபரப்பு தகவல்கள்

சென்னை: அமித்ஷாவை சந்தித்து விட்டு வந்த 2 நாளில் அதிமுக கூட்டணியில் இருந்து அண்ணாமலையின் பேச்சை காரணம் காட்டி பாஜவை வெளியேற்றியது ஏன் என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோருக்கு சீட் ஒதுக்க பாஜக முடிவு செய்துள்ளதால், அண்ணாமலையை காரணமாக வைத்து கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒன்றிய அரசின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே மாதத்துடன் முடிகிறது. இதனால் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடத்தி முடித்திருக்க வேண்டும். இதனால் தேர்தலுக்கு 6 மாதங்களே உள்ளன. இதனால் நாடு முழுவதும் தேர்தல் ஜுரம் தொடங்கி விட்டது. பல்வேறு அணிகளாக பிரிந்திருந்த எதிர்க்கட்சிகள் தற்போது ஒன்றிணைந்து விட்டன. அவர்கள் இந்தியா என்ற பெயரில் கூட்டணியை தொடங்கியுள்ளனர். இந்தக் கூட்டணியில் உள்ள அரசியல் கட்சிகள் பெரும்பாலான பெரிய மாநிலங்களில் ஆட்சியில் இருப்பவை. இதனால் மக்களவை தேர்தல் வந்தால், அவர்கள் மாநிலங்களில் வெற்றி பெறுவார்கள். அப்படி வெற்றி பெற்றால் பாஜக கூட்டணி தோற்கும் நிலை உருவாகியுள்ளது.

அதற்கு முக்கிய காரணம் கடந்த மக்களவை தேர்தலின்போது கூட்டணியில் இருந்த கட்சிகளை உடைத்து, அந்த மாநிலங்களில் பாஜக ஆட்சியை கொண்டுவர திட்டமிட்டதே காரணம் என்று கூறப்படுகிறது. அதற்கு உதாரணமாக மகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி, பீகாரில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தள கூட்டணி அமைத்து போட்டியிட்டு பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்றது. தேர்தலுக்குப் பிறகு அந்த கூட்டணியுடன் மோதல் போக்கை கடைப்பிடித்தது. தற்போது அந்தக் கட்சிகள், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ளன.

இதனால், இந்தியா கூட்டணிக்கு பலம் பெருகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தாமதமாக விழித்துக் கொண்ட பாஜக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக தங்களுடன் இருக்கும் கூட்டணிக் கட்சிகளுடன் முன் கூட்டியே கூட்டணியை உறுதி செய்வது என்று முடிவு எடுத்துள்ளது. அதன்படி ஏற்கனவே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியுடன் 2 முறை பேச்சுவார்த்தை நடத்தியது. கடந்த 15ம் தேதி அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிச்சாமி தனியாக சந்தித்துப் பேசினார். அப்போது கூட்டணியை இருவரும் இறுதி செய்வது குறித்து பேசியுள்ளனர்.

அதில் பாஜகவுக்கு தமிழகத்தில் 14 தொகுதிகள் கண்டிப்பாக வேண்டும். புதுவையைப் பொறுத்தவரை பாஜக, என்ஆர்காங்கிரஸ்தான் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. இதனால் அங்கு பாஜகதான் போட்டியிடும். அங்கு அதிமுக சிறிய கட்சிதான். தமிழகத்தைப் பொறுத்தவரை 14 தொகுதிகளில் பாஜக போட்டியிடும். அதில் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற டிடிவி தினகரனுக்கு சிவங்கை அல்லது மயிலாடுதுறை, ஓ.பி.ரவீந்திரநாத்துக்கு தேனி, கிருஷ்ணசாமிக்கு தென்காசி, பாரிவேந்தருக்கு பெரம்பலூர், ஏ.சி.சண்முகத்துக்கு வேலூர் மற்றும் பாஜகவுக்கு நீலகிரி, கோவை, கடலூர், நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்பட 9 தொகுதிகள் வேண்டும் என்று அமித்ஷா கூறியுள்ளார். இதுதான் எங்கள் முடிவு. இதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறிவிட்டார்.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு வாய்ப்பாக வந்ததுதான் அண்ணாமலையின் பேச்சு. ஜெயலலிதாவைப் பற்றி ஊழல் முதல்வர் என்று கூறியபோது கூட அமைதியாக இருந்து விட்டு தற்போது அண்ணாவைப் பற்றி சொன்னதும் கூட்டணியில் இருந்து பாஜகவை வெளியேற்றியதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் தொகுதிப் பங்கீடுதான் என்று கூறப்படுகிறது. கூட்டணியில் டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வத்தை சேர்ப்பது எடப்பாடி பழனிச்சாமிக்கு பிடிக்கவில்லை. இப்போது தொகுதி கொடுப்பார்கள். பின்னர் கட்சியில் சேர்த்து பொறுப்பு கொடுக்க வேண்டும் என்பார்கள். கட்சிக்குள் பாஜக தலைவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவார்கள் என்று எடப்பாடி கருதுகிறார். இதனால் கூட்டணியில் இருந்து வெளியேற சமயம் பார்த்துக் கொண்டிருந்தவருக்கு அண்ணாமலையின் பேச்சு வரப்பிரசாதமாக அமைந்து விட்டது.

இதனால்தான் பாஜகவை கூட்டணியில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி வெளியேற்றி விட்டதும் தெரியவந்துள்ளது. இதனால்தான் வழக்கம்போல ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோரை வைத்து பேச வைத்து விட்டார் என்று தெரியவந்துள்ளது.

அதிமுக கூட்டணியில் டிடிவி, ஓபிஎஸ்
டிடிவி தினகரனுக்கு சிவங்கை அல்லது மயிலாடுதுறை, ஓ.பி.ரவீந்திரநாத்துக்கு தேனி, கிருஷ்ணசாமிக்கு தென்காசி, பாரிவேந்தருக்கு பெரம்பலூர், ஏ.சி.சண்முகத்துக்கு வேலூர் மற்றும் பாஜகவுக்கு நீலகிரி, கோவை, கடலூர், நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்பட 9 தொகுதிகள் வேண்டும் என்று அமித்ஷா கூறியுள்ளார். தொகுதிப் பங்கீடு பிரச்னைதான் எடப்பாடியின் முழு கோபத்துக்கு காரணம்.

The post அமித்ஷாவை சந்தித்த 4 நாட்களில் கூட்டணியில் இருந்து பாஜவை வெளியேற்றியது ஏன்?.. எடப்பாடி பழனிச்சாமியின் முடிவு குறித்து பரபரப்பு தகவல்கள் appeared first on Dinakaran.

Related Stories: