அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், உஷபூஜை உள்பட வழக்கமான பூஜைகள் நடைபெற்றன. வரும் 22ம் தேதி இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். அன்றுடன் புரட்டாசி மாத பூஜைகள் நிறைவடையும். ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும். நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி முன்பதிவு மையங்கள் செயல்படுகின்றன. நேற்று சபரிமலை பகுதியில் பலத்த மழை பெய்தது. கன மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்தனர்.
The post புரட்டாசி மாத பூஜைகளுக்காக நடை திறப்பு சபரிமலையில் கொட்டும் மழையிலும் தரிசனத்துக்காக குவிந்த பக்தர்கள் appeared first on Dinakaran.