இதையடுத்து வனத்துறையினர் சார்பில் கூண்டு வைத்து 5 சிறுத்தைகள் பிடிக்கப்பட்டு திருப்பதி உயிரியல் பூங்காவில் வைத்து கண்காணிக்கப்பட்டு வந்தது. இதில் முதலில் பிடிபட்ட சிறுத்தை, சிறுவனை தாக்கவில்லை என தெரிய வந்ததால் வனப்பகுதியில் விடப்பட்டது. பின்னர் சிறுமியை கொன்ற இடத்தில் இருந்தும், சிறுமியின் உடலில் கிடைத்த சிறுத்தையின் முடி உள்ளிட்டவை கொண்டும் லட்ஷிதாவை தாக்கிய சிறுத்தையை அடையாளம் கண்டு தனிமைப்படுத்த, பிடிபட்ட சிறுத்தைகளின் நகம், ரத்தம், முடி போன்றவற்றை வைத்து மரபணு பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் கடந்த ஆக. 14, 17ம் தேதிகளில் சிக்கிய சிறுத்தைகள், சிறுமியை கொல்லவில்லை என தெரியவந்தது. இதையடுத்து தலைமை வனவிலங்கு காப்பாளரின் அனுமதி பெற்று, ஒரு சிறுத்தை என்எஸ்டிஆர் (நாகார்ஜுனா சாகர் சைலம் டைகர் ரிசர்வ் வனப்பகுதியில்) உள்ள குண்ட்லா பிரம்மேஸ்வரா வன சரணாலயத்தில் விடப்பட்டது. 3வதாக பிடிபட்ட சிறுத்தை விசாகப்பட்டினத்தில் உள்ள இந்திரா காந்தி உயிரியல் பூங்காவிற்கு மாற்றப்பட்டது.
4வது சிறுத்தை ஆகஸ்ட் 28ம் தேதியும், 5வது சிறுத்தை செப்டம்பர் 7ம் தேதியும் கூண்டில் பிடிபட்டது. இவற்றின் மரபணு சோதனை முடிவுகள் வராததால் திருப்பதி உயிரியல் பூங்காவில் வைக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக திருப்பதியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post சிறுமியை தாக்கவில்லை என அறிக்கை வந்ததால் திருப்பதி மலைப்பாதையில் சிக்கிய 5 சிறுத்தைகளில் 2 விடுவிப்பு appeared first on Dinakaran.
