அப்போது வங்கி கட்டிடத்தின் 2வது தளத்தில் சமீபத்தில் கட்டப்பட்டிருந்த கைப்பிடிச்சுவர் தரமற்று இருந்ததால் காற்றின் வேகத்தை தாங்க முடியாமல் மேல இருந்து கீழே சரிந்து விழுந்தது. இதில், பணியில் இருந்த காவலாளி சிக்கி படுகாயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சிட்லபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மருத்துவமனையின் கைப்பிடி சுவர் இடிந்து விழுந்து காவலாளி பலி appeared first on Dinakaran.
