அப்போது, மனுதாரர் தரப்பில், முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தெளிவற்றது. அரசியல்வாதிகள் மற்றும் பள்ளியில் இருந்து நீக்கப்பட்ட மாணவர்கள், ஊடக விவாதம் ஆகியவற்றின் அழுத்தம் காரணமாக முறையான விசாரணை இன்றி மனுதாரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது. இதையடுத்து முன்னாள் மாணவி அளித்த புகாரில், சிவசங்கர் பாபா மீது எதன் அடிப்படையில் வழக்கு பதிவுசெய்யப்பட்டது என்று சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 25ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
The post மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த விவகாரம் சிவசங்கர் பாபா மீது எதன் அடிப்படையில் வழக்குப்பதிவு? சிபிசிஐடி அறிக்கை தர உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.