சென்னை கிழக்கு தாம்பரம் அருகே இரும்புலியூரை சேர்ந்தவர்கள் விவேக் (29), தனசேகர் (25), ராகுல் (27), மணிகண்டன் (34) ஆகிய 4 வாலிபர்களை மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உத்தரவின்பேரில், குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு செங்கல்பட்டு நீதிமன்றம் அருகே,இரும்புலியூரை சேர்ந்த ரவுடி லோகேஷ் (28) என்பவரை நாட்டு வெடிகுண்டு வீசி வெட்டி படுகொலை செய்த வழக்கில், இந்த 4 பேர் தொடர்பு உடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
The post தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 4 வாலிபர்கள் குண்டாசில் கைது appeared first on Dinakaran.