அதேபோல் நிதி நிறுவனங்கள், வங்கிகள், அரசு அமைப்புகள் மற்றும் தனியார் சேவை வழங்குநர்கள் தொடர்பான குறைதீர் வழக்குகளும் எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டன. இதுகுறித்து உச்ச நீதிமன்ற வட்டாரங்கள் கூறுகையில், ‘தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, டெல்லி, மணிப்பூர் தவிர நாடு முழுவதும் கடந்த 9ம் தேதி லோக் அதாலத் நடந்தது.
உச்ச நீதிமன்ற நீதிபதியும், தேசிய சட்ட சேவைகள் ஆணைய நிர்வாகத் தலைவருமான நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையில், இந்த ஆண்டின் மூன்றாவது தேசிய லோக் அதாலத் 35 மாநிலங்களில் நடந்தது. நிலுவையில் உள்ள 32.3 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. ெமாத்தம் 1.67 கோடிக்கும் அதிகமான வழக்குகளுக்கு லோக் அதாலத் மூலம் ரூ.1,223.9 கோடிக்கு தீர்வு காணப்பட்டது. லோக் அதாலத்தின் மூலம் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் சுமையை எளிதாக்குவது மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பதையும் கட்டுப்படுத்தும்’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
The post நாடு முழுவதும் 35 மாநிலங்களில் நடந்த தேசிய லோக் அதாலத் மூலம் 1.67 கோடி வழக்குகளுக்கு தீர்வு: உச்ச நீதிமன்றம் தகவல் appeared first on Dinakaran.