இத்தகைய தொலைநோக்கு திட்டத்தின்கீழ் கடந்த 2021-2022ம் ஆண்டு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்து, கடந்த 2022ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. எனினும், மேற்கண்ட பகுதிகளில் இதுவரை நகர்ப்புற வளர்ச்சி குழுமம் கட்டமைப்பதற்கான எவ்வித ஆக்கபூர்வமான செயல் திட்டங்கள் முன்னெடுக்காமல், கிணற்றில் போட்ட கல்லை போல் கிடப்பில் இருக்கிறது. இவற்றை விரைந்து நடைமுறைப்படுத்துவதன் மூலம் மேற்கண்ட பகுதிகளில் அடிப்படை வளர்ச்சி, உள்கட்டமைப்பு, கட்டுமானம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் துறை மாபெரும் வளர்ச்சி பெறும். தாங்கள் இதை கூடுதல் கவனத்தில் எடுத்துக் கொண்டு, மேற்கண்ட பகுதிகளில் நகர்ப்புற வளர்ச்சி குழுமங்களை நிறுவி, அதன் கட்டமைப்புகளை விரைந்து முடிக்க ஆலோசனைக் குழு மற்றும் திட்டமிடல் பிரிவுகளை நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆ.ஹென்றி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
The post கோவை, திருப்பூர், ஓசூர் பகுதிகளில் நகர்ப்புற வளர்ச்சி குழு கட்டமைப்பு: முதல்வருக்கு ஆ.ஹென்றி கடிதம் appeared first on Dinakaran.