மற்ற தொகுதிகளின் ஏற்கனவே இருந்த உறுப்பினர்கள் மறைவால் அந்த இடங்கள் வெற்றிடமானது. ஆறு மாநிலங்களில் 7 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு கடந்த 5ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று பகல் 1 மணி நிலவரப்படி பாஜக மற்றும் கூட்டணி 4 இடங்களிலும், காங்கிரஸ், திரிணாமுல், சமாஜ்வாதி தலா ஒரு இடங்களிலும் (இந்தியா கூட்டணி) முன்னிலை வகித்தன. இன்று மாலை 5 மணியளவில் இறுதி முடிவு அறிவிக்கப்படும். மதியம் நிலவரப்படி திரிபுராவில் இரு தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களும், கேரளாவில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
The post 7 சட்டப்பேரவை தொகுதி தேர்தல் முடிவு: பாஜக கூட்டணி 4; ‘இந்தியா’ கூட்டணி 3 இடங்களில் முன்னிலை appeared first on Dinakaran.