இந்நிலையில், கொலையாளிகள் 4 பேர், நேற்று முன்தினம் நள்ளிரவு நொளம்பூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கோவிலூர் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் (38), அறிவு (எ) அறிவழகன் (30), சிவா (எ) சிவசுப்பிரமணியன் (28), சுதாகர் என்பதும், அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ராஜேஷை கடந்த 2021ம் ஆண்டு கொலை செய்ததற்கு பழிவாங்குவதற்காக ஜெகதீசனை கொலை செய்ததும் தெரியவந்தது.
இக்கொலை வழக்கு தொடர்பாக, 4 பேர் போலீசில் சரணடைந்ததையடுத்து, ஜெகதீசனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர், போலீசார், அண்ணா நகரில் உள்ள சுடுகாட்டில் அவரது உடலை அடக்கம் செய்தனர்.
The post அமமுக பிரமுகர் கொலையில் 4 பேர் போலீசில் சரண் appeared first on Dinakaran.