சங்ககிரி விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுநர் கைது..!!

சேலம்: சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே ஏற்பட்ட விபத்துக்கு காரணமான லாரியை ஓட்டிச் சென்ற நபரை கைது செய்தது போலீஸ். சின்னகவுண்டனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதி 6 பேர் பலியாகினர். விபத்தில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு குழந்தை உள்பட 6 பேர் உயிரிழந்தனர். விபத்துக்கு காரணமான லாரியை சங்ககிரி தனிப்படை போலீஸ் கோவையில் மடக்கிப் பிடித்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சங்ககிரி விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுநர் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: