3ம் நாளான நேற்று முன்தினம் 4ம் கால யாகசாலை பூஜையும், பின்னர் யாகசாலையில் இருந்து புனிதநீர் ஊர்வலமாக எடுத்து வந்து கோயில் கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், மகேஸ்வர பூஜைக்கு பின் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து நேற்று அம்மனுக்கு அபிஷேகமும், மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவிற்கு ஊத்துக்கோட்டை, தாசுகுப்பம், புதுகுப்பம் போன்ற பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இதை தொடந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெறுகிறது.
The post ஊத்துக்கோட்டை அருகே ஸ்ரீ மாத்தம்மன் கோயில் கும்பாபிஷேக விழா appeared first on Dinakaran.
