திருப்பதியில் ஆகஸ்ட் மாதம் ரூ.120 கோடி காணிக்கை

திருமலை: திருப்பதி கோயிலில் ஆகஸ்ட் மாதம் 22.25 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். இவர்கள் ரூ.120 கோடியை உண்டியலில் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு மாதமும் தரிசனம், தலைமுடி மற்றும் உண்டியல் காணிக்கை எண்ணிக்கை விவரங்கள் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்படும். அதன்படி, கடந்த ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை 22 லட்சத்து 25 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இவர்களில் 9.7 லட்சம் பக்தர்கள் மொட்டையடித்து தலைமுடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் கோயில் உண்டியலில் ரூ.120 கோடியே 5 லட்சத்தை காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.

The post திருப்பதியில் ஆகஸ்ட் மாதம் ரூ.120 கோடி காணிக்கை appeared first on Dinakaran.

Related Stories: