ஸ்ரீ மதுரை, தேவர் சோலை அரசு பள்ளிகளில் 106 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்

 

கூடலூர், செப்.1: ஸ்ரீ மதுரை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி தலைமை ஆசிரியை யோகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. இதில் திமுக ஒன்றிய செயலாளர் லியாக்கத் அலி மிதி வண்டி வழங்கி துவக்கி வைத்தார்.கூடலூர் ஒன்றிய ஊராட்சி குழு தலைவர் கீர்த்தனா, ஸ்ரீ மதுரை ஊராட்சி தலைவர் சுனில், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் கங்காதரன், மேலாண்மை குழு தலைவர் மஞ்சு, துணை தலைவர் ரசாக் மற்றும் தேவசியா, பாபு, பிரின்ஸ், மனோஜ், ராஜகுமாரி, கலை அமுதன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

முடிவில் அனீபா மாஸ்டர் நன்றி கூறினார். அதேபோல், தேவர் சோலை அரசு உயர்நிலைப்பள்ளியில் மிதி வண்டிகள் வழங்கும் நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தி குமாரி தலைமை வகித்தார். பள்ளி ஆசிரியர் ராஜ் வரவேற்றார். தேவர் சோலை பேரூராட்சி மன்ற தலைவர் வள்ளி, துணை தலைவர் பாபு, வார்டு உறுப்பினர் நாசர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் 106 மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

The post ஸ்ரீ மதுரை, தேவர் சோலை அரசு பள்ளிகளில் 106 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல் appeared first on Dinakaran.

Related Stories: